நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அதிரடி மாற்றம்! பதவிகளுக்கு புதிய அதிகாரிகள்
பெப்ரவரி 12 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே. கரவிட்ட, குற்றப் புலனாய்வு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக Inspector General) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பணியாற்றிய பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியான எம்.டி.பி.தயாரத்ன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (எஃப்.சி.ஐ.டி) விரைவாக அமைக்கும் நோக்கில் இந்தப் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்துப் பிரிவு
இதே நேரத்தில், போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபரான பி. லியனகே, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.

இதன்படி பொலிஸின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை (FCID) மீண்டும் நிறுவுவதன் மூலம், நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை மிகவும் முறையான மற்றும் திறமையான முறையில் மேற்கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri