தேசிய பாடசாலைகளின் விடுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப்பரீட்சைகளை அடுத்த ஆண்டு உரிய காலத்தில் நடத்துவதற்கு முடியுமான வகையில் பாடநெறிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும்
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் பெரும்பாலும் பாடசாலை விடுமுறைகளை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரித்து, வருடத்திற்குள் பாடங்களை கற்பித்து நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
2022 ஆம் ஆண்டிற்குள் திட்டமிட்டவாறு பாடங்களை பூர்த்தி செய்வதை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வந்த போது, உயர் தரப்பரீட்சைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிள்ளைகளின் பெற்றோர் விடுத்த கோரிக்கை காரணமாக உயர் தரப்பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நேரிட்டது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பாடசாலைகளின் இரண்டாம் தவணை முடிவடையவுள்ளதுடன் 5 ஆம் திகதி மூன்றாம் தவணையை ஆரம்பித்து தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
