மகிந்தவின் கட்சிக்கு அருகில் அலுவலகத்தை திறக்கும் சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைந்துள்ள பத்தரமுல்லையில் தனது கட்சியின் அலுவலகத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளார்.
17ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பொதுஜன ஐக்கிய முன்னணியை அவர் மீள்உருவாக்கம் செய்ய தீர்மானித்துள்ளார் என்பது பகிரங்கமான விடயம்.
இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இணைந்து செயற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அலுவலகம் திறக்கப்படவுள்ளமை முக்கியஅம்சமாகும்.
அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரக்காவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam