இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்பு
நாட்டின் வானிலையில் இன்று இரவில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சபரகமுவ, மத்திய, மேல், ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் நிகழ்வு எதிர்வரும் 14 வரை நீடிக்கும் என்ற வகையில் இன்று 12 ஆம் திகதி சூரியன், வேப்பங்குளம், மடு வீதி, பிரமணாளன் குளம், பம்பைமடு, தந்திக்குளம், பெரியகரைச்சி ஆகிய இடங்களில் மதியம் 12:11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
