டக்ளசிற்காக சிறீதரனை எச்சரித்த சாணக்கியன்! கட்சியில் இருந்து பலர் வெளியேற்றம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சிவிகே சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவை சிறிதர் திரையரங்கில் சந்தித்தது தொடர்பில் பல வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக்கட்சி தொண்டர்களே இது தவறு என்று கூறும் நேரத்தில் சுமந்திரன் இது சரியென்று நியாயப்படுத்துகின்றார்.
தமிழ்தேசிய கொள்கையை உடைப்பதில் இந்தியா பின்னணியில் உள்ளதா என்பதுடன் அதற்கு கருவியாக சுமந்திரன்-சிவிகே சிவஞானத்தை பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகமும் உள்ளது.
ஈபிடிபின் ஆதரவை கோரிய விடயத்தில் தம்முடைய எதிர்ப்பை கட்சியின் அரசியல் குழுவில் சிறீதரன் பதிவுசெய்தாலும், அதை கட்சி நிர்வாகத்தை பாதிக்கும் விடயமாக மாற்ற கூடாது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
