கட்சியின் முடிவையும் மீறி ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் சாமர சம்பத்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் யோசனை முன்வைத்ததாகவும் அதற்கு கட்சி இணங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய முக்கியமான தருணத்தில் கட்சி, நிற பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு எனவும் தசநாயக்க மேலும் கூறியுள்ளார். சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri