மகிந்தவின் தவறை பகிரங்கமாக சுட்டிக்காட்டிய அவரின் சகோதரர் (Video)
எங்களிடம் இருந்த சொத்துக்களை அடகு வைத்தே அரசியலுக்கு வந்துள்ளோம், இன்னும் அடகு வைக்கப்பட்டவற்றில் மீட்க முடியாத சொத்துக்களும் உள்ளன என மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு அர்ப்பணிப்புகளை செய்து பயணித்தும் எங்களின் அரசியல் பயணத்தில் இழக்கக்கூடாதவற்றை இழந்து விட்டோம்.
மேலும், தனது ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்ததும் மகிந்த ஓய்வு பெற்றிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று மகிந்தவின் தவறையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,