பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கோரிக்கை - இலங்கையில் எரிபொருட்களின் விலைகளும் உயர்த்தப்படுமா?
எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 70 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த நட்டத்தை ஈடு செய்ய எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டுமென கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதன் அவசியம் குறித்து துறைசார் அமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.