18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் வழங்கும் விசேட சலுகை
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கம் சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழு இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நுழைவுச்சீட்டுக்கள் தேவையில்லை..
உள்ளூர் குழந்தைகளிடையே கலாசார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.
அதன்படி, இந்த வாய்ப்பின் காரணமாக, சிகிரியா, யாபஹுவ, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை, நுழைவுச் சீட்டுக்கள் இல்லாமல் குழந்தைகள் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கு இணையாக, வெளிநாட்டு குழந்தைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் சம்பந்தப்பட்ட இடங்களுக்குள் நுழைவதற்கான அனுமதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
