ஊழியர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பள அதிகரிப்பு : மத்திய வங்கிக்கு சென்ற பரிந்துரை
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு இவ்வாறு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.
சம்பள அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியில் கடமை புரிவோரின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெளிவான, நியாயமான தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறு சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |