மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : நிதி இராஜாங்க அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
இந்த சமயத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் இருப்பது நல்லது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடவாறு குறிப்பிட்டார்.
அதிகாரிகளிடம் விசாரணை
எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடமாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri