மத்திய வங்கி ஆளுநர் வெளிப்படுத்தவுள்ள முக்கிய இரகசியங்கள்! விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு
ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர்களை இலங்கைக்கு கொண்டு வராமல் தாம் ஈட்டிய வருமானத்துடன் ரூபாவாக மாற்றும் வர்த்தகர்கள் குறித்த தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஏற்றுமதியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் விதிமுறை

இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளின் படி, ஏற்றுமதியாளர்கள் 180 நாட்களுக்குள் ஈட்டிய டொலர் வருமானத்தை நாட்டுக்கு கொண்டு வந்து பணத்தை ரூபாவாக மாற்ற வேண்டும்.
இலங்கையின் முதல் நூறு ஏற்றுமதியாளர்களில் 27 ஏற்றுமதியாளர்கள் மாத்திரமே மேற்படி விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri