மீண்டும் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம்! சீமெந்து விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கட்டட நிர்மாணத் தொழில் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி விலை அதிகரிப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சீமெந்தின் தற்போதைய விலை
தற்போதைக்கு 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து விலை 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மீண்டும் அதிகரிக்கும் சீமெந்து விலை |
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே குறித்த விலையேற்றம் பதிவாகியிருந்தது.
அதன் பின்னர் பொது மக்கள் தங்கள் நிர்மாணத் தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டதால் ஏராளமான கட்டட நிர்மாணத் தொழிலாளர்கள் வேலை இழக்க நேர்ந்தது.
வரி அதிகரிப்பு
தற்போது அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ள வரி அதிகரிப்பின் காரணமாக சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக சுசந்த லியனாரச்சி தெரிவித்துள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
