ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து செல்லிடப்பேசி மீட்பு
தற்பொழுது சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து(Ranjan Ramanayakke) செல்லிடப்பேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ரஞ்சன் வெலிச்சடை சிறைச்சாலை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.
முழங்காலில் ஏற்பட்ட உபாதைக்காக ரஞ்சன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளார்.
இவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சனிடம் சோதனையிட்ட போது செல்லிடப்பேசி மற்றும் ஹான்ட்ஸ்ப்ரீ என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ரஞ்சனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri