ஒரு மணித்தியாலத்துக்கு மாத்திரமே, டீசல் கையிருப்பு! முழுமையாக இருளில் மூழ்குமா இலங்கை?
இலங்கை மின்சார சபையின் டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இன்று மாலை 5மணி வரைக்குமே இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் முழு நாடும் இருளில் மூழ்கும் என்று மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தமை தொடர்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
இந்தநிலையில் நாளைய தினத்தில் மின்சார உற்பத்திக்காக 2000 மெற்றின்தொன் டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பன தேவைப்படும் என்று ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தாம் இந்த விடயங்களை கூறியபோது, அமைச்சர் கம்மன்பில, அதனை நிராகரித்து வந்தார்.
எனினும் தற்போது அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்றும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிலைமையை சமாளித்து இன்று மாலையில் மின்சாரம் தடைப்படாமல் விநியோகிக்கப்படும் என்று மின்சாரசபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்றூ நவமணி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய எரிபொருள் நிறுவனம்!
மின்சாரத்துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு - சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
