மின்வெட்டுக்கு மத்தியில், மின்சார பொறியியலாளர்களின் எச்சரிக்கை!
புதிய பொது முகாமையாளரின் நியமனத்தை ஆட்சேபித்து நாளையதினம் மின்சாரசபை பணியாளர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தை நடத்தவுள்ளனர்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
மின்சார சபைக்கான புதிய பொது முகாமையாளராக, சபையின் முன்னாள் பணியாளரான சுசந்த பெரேரா அண்மையில் நியமனம் செய்யப்பட்டார்
எனினும் இந்த நியமனம், சட்டத்துக்கு புறம்பானது என்று பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனை ஆட்சேபித்தே, தமது பணியாளர்கள் நாளைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.