நிதி என்ற சொல்லாடல் தொடர்பில் மத்திய வங்கியின் எச்சரிக்கை
வணிகப் பெயர்களில் 'நிதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு எதிராக இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் (சட்டம்) பிரிவு 10(2) இன் படி, 'நிதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது, குறித்த சட்டத்தின் விதிகளை மீறுவதாக மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் எச்சரிக்கை
நிதி நிறுவனம் மற்றும் சட்டத்தின் பிரிவு 10(6) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தை தவிர, வேறு எந்த நபரும், நிதி' என்ற சொல்லை தனியாகவோ அல்லது வேறு எந்த வார்த்தையுடனோ அல்லது அதன் வழித்தோன்றல்கள் அல்லது அதன் ஒலிபெயர்ப்புகள் அல்லது அவற்றின் சமமானவைகளுடன் இணைந்து, அத்தகைய நபரின் பெயர் அல்லது விளக்கம் அல்லது வணிகப் பெயரின் ஒரு பகுதியாக, இலங்கை தமது வங்கியின் முன்கூட்டிய எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சட்டத்தின் பிரிவு 56(4) இன் படி, குறித்த விதியை மீறும் அல்லது பின்பற்றத் தவறிய எந்தவொரு நபரும் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளியாக கருதப்படுவார் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சட்டத் தேவைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri