புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள கோரிக்கை
வங்கி அமைப்பு உட்பட முறையான வழிகளில் தங்கள் வருமானத்தை அனுப்புவதற்கு உதவுமாறு இலங்கை மத்திய வங்கி இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரை இலங்கைப் பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய வங்கி, அவர்களின் தொடர்ச்சியான உதவிகளை கோரியுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தற்போதைய அந்நிய செலாவணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவது முக்கியமான தருணம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஹவாலா மற்றும் உண்டியல் போன்ற முறைசாரா வழிகள் ஊடாக வங்கி வலையமைப்பிற்கு வெளியே செயற்படுவதால் இவ்வாறான முறைமைகளின் ஊடாக அனுப்பப்படும் அந்நியச் செலாவணியை அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த முடியாது என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri