கனியவள கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
நாட்டின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் ஒரு மணிநேரம் மின் விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கனியவள கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு, உராய்வு எண்ணெய் வழங்கப்படாமை காரணமாகவே நாட்டின் பல பாகங்களில் நேற்றிரவு மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இலங்கை மின்சார சபைக்கு இன்று 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை கனியவள கூட்டுத்தாபனம் வழங்கியுள்ளது.
இதேவேளை,சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.