கத்தோலிக்க திருச்சபையை கடுமையாக விமர்சித்த அமைச்சர் டிரான் அலஸ் - செய்திகளின் தொகுப்பு
பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பயணித்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அருட் தந்தை சிறில் காமினி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் போது பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் அப்போதைய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அழைத்து உதவி கேட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையின் பின்னர் அருட் தந்தை சிறில் காமினிக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் மறுநாள் காலை அவர் தேசபந்து தென்னகோனை அழைத்து நன்றி தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். பிரச்சினை ஏற்படும் போது இவ்வாறு நடந்துகொள்ளும் நபர்கள், பின்னர் பொலிஸாரை அழைக்காதது போன்று நடந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |