பேரழிவு நிலை உருவாகலாம்: அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது பொலிஸார் நடத்திய அடக்குமுறைக்கு ஓமல்பே சோபித தேரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் நேற்றையதினம் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற்றும் போராட்டத்தை மேற்கொள்வது நியாயமானது. இவ்வாறான அமைதியான போராட்டங்களை நசுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தால் நாட்டில் வேறுவிதமான பேரழிவு நிலை உருவாகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம் News Lankasri