யுகதனவி விவகாரம்! மனு மீதான வழக்கு ஒத்திவைப்பு
கெலவரப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பிரதம நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய, அச்சல வெங்கப்புலி மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் இந்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதியரசர் எல்.கே. டி. பி. தெஹிதெனிய வழக்கின் விசாரணைக்கு இன்று முன்னிலை ஆகாததால் வழக்கை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.