புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள பெற்றோர்

Ministry of Education Grade 05 Scholarship examination Law and Order
By Sivaa Mayuri Oct 15, 2024 12:31 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் உத்தரவை வழங்கக் கோரி, இன்று இலங்கையின் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்களின் பெற்றோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த தேர்வில் இருந்து ஒரு வினாத்தாள் ஒன்றின் மூன்று கேள்விகள் கசிந்ததாக, 2024 செப்டம்பர் 20 ஆம் திகதியன்று, கூறப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை

இதனையடுத்து, செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் குறியிடல் நடவடிக்கைகள் விசாரணைக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள பெற்றோர் | Case In High Court Against Scholarship Awardees

இந்தநிலையில் பரீட்சை வினாத்தாளில் இருந்து மூன்று கேள்விகள் மட்டுமே முன்கூட்டியே கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மிளகாய் நீரை ஊற்றி பொலிஸாரால் சித்திரவதை: வழக்கில் இருந்து வெளியேறிய சட்டமா அதிபர்

மிளகாய் நீரை ஊற்றி பொலிஸாரால் சித்திரவதை: வழக்கில் இருந்து வெளியேறிய சட்டமா அதிபர்

அநுரகுமார திஸாநாயக்கவிடம் முறைபாடு

எனினும் முழு வினாத்தாளும் கசிந்ததாக பல சந்தர்ப்பங்களில் மாணவர்களின் பெற்றோர் கூறி வருகின்றமையை அடுத்து, இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள பெற்றோர் | Case In High Court Against Scholarship Awardees

இது தொடர்பில் பெற்றோர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முறையிட்டதையடுத்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு விசாரணை முடியும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார்.

அத்துன், கசிந்ததாகக் கூறப்படும் 03 வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

எனவே, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விடைத்தாள்களை மதிப்பிடும் பணி உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான விடயங்களின் நடந்துமுடிந்துள்ள நிலையிலேயே தற்போது உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிடவுள்ள விசேட செய்தி

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிடவுள்ள விசேட செய்தி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US