அம்பாறையில் வரவேற்பு கோபுரம் அமைப்பு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அம்பாறை(Ampara) மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையின் நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி வீரமுனை நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றினை சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.
இன முரண்பாடு
வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இன முரண்பாட்டை, இன வன்முறையினை ஏற்படுத்தும் என சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
இந்த வழக்கானது நேற்று(19.06.2024) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது இரு சாராரின் சமர்ப்பணங்களையும் செவிமடுத்த நீதிவான் குறித்த வழக்கினை கட்டளைக்காக எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.
இனமுரண்பாடுகள் ஏற்படும் இனக்கலவரம் ஏற்படும் என்ற வகையில் தடையுத்தரவினை பொலிஸார் கோரியிருந்தபோதிலும் அவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்களை கைதுசெய்யாது இவ்வாறான கட்டளைகளை பெற்றிருப்பதானது அடிப்படையற்றது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
