சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பேணாதவர்கள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்தவறும் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவதானிப்பதற்கும் பண்டிகைக் காலத்திலும் உணவுப் பொருட்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு நாடு தழுவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கோவிட் சுகாதார விதிகளை பின்பற்றாத பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் தேவையற்ற வகையில் ஒன்று கூடுவதனை தவிர்க்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். உரிய முறையில் முகக்கவசங்களை அணிந்து வெளியே செல்லுமாறு கோரியுள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam