ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளில் பெருந்திரளான மக்கள் (Photos)
கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் மண்ணெண்ணெய்க்காக வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இதனையடுத்து நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்ற போதும் தமக்குரிய அத்தியாவசிய பொருட்கள் இல்லாத நிலையில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அதன்படி எரிவாயு, மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் பலர் வீடுகளுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி வருவதை அறியமுடிகிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட போதும் கூட மக்கள் தமது தேவைகளுக்காக தொடர்ந்தும் வீதிகளில் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுயிலுள்ள எரிபொருள் நிலையமொன்றிலும், மின்சாரம் இல்லாத நிலையிலும் கூட மழைக்கு மத்தியில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam