ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளில் பெருந்திரளான மக்கள் (Photos)
கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் மண்ணெண்ணெய்க்காக வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இதனையடுத்து நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்ற போதும் தமக்குரிய அத்தியாவசிய பொருட்கள் இல்லாத நிலையில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அதன்படி எரிவாயு, மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் பலர் வீடுகளுக்கு ஏமாற்றத்துடன் திரும்பி வருவதை அறியமுடிகிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட போதும் கூட மக்கள் தமது தேவைகளுக்காக தொடர்ந்தும் வீதிகளில் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுயிலுள்ள எரிபொருள் நிலையமொன்றிலும், மின்சாரம் இல்லாத நிலையிலும் கூட மழைக்கு மத்தியில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக மக்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: அதிரடி தாக்குதல் நடத்திய உக்ரைன் News Lankasri