கிளிநொச்சியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றிய கார்
கிளிநொச்சி ஏ-9 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென நேற்றையதினம்(5) தீப்பற்றி எரிந்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.
தீயணைப்பு பிரிவு
பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிசார், தீயை அணைத்து பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு பிரிவானது 24 மணி நேர சேவையை வழங்க வேண்டிய ஒரு முக்கிய நிறுவனம் ஆகும்.
பாரிய தீ விபத்து
இதைவிடமும் இன்னமும் பாரிய தீ விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவு இவ்வாறு அலட்சியமாக இருந்த்ல் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
எனவே இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










