ரஷ்ய படை அதிகாரிகள் பயணித்த கார் வெடித்து சிதறியது: உலக செய்திகளின் தொகுப்பு
ரஷ்ய உயரதிகாரிகள் பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார் வெடித்துச் சிதறியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஓலேஷ்கி, கெர்சன் பிராந்தியம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் FSB படை வீரர் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டதுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். காருக்கு பாதுகாப்பாக இருந்த ரஷ்ய வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன் படைத்தரப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்காடோவ்ஸ்கில், வடிகட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உக்ரைனிய குடிமக்களை சித்திரவதை செய்வதற்கும் அவர்கள் ஓலேஷ்கிக்கு வருகை தந்ததாக உக்ரைன் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam