அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல: அருட்தந்தை சத்திவேல்

Police spokesman Sri Lankan Tamils Vavuniya Sri Lanka Politician Sri Lankan political crisis
By Shan Mar 18, 2023 04:12 AM GMT
Report

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (18.03.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், 

பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளி உலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல: அருட்தந்தை சத்திவேல் | Cannot Accept Release

தெற்கின் சமூகம் இடமளிக்கூடாது 

சிறையில் வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் துரிதமாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என்றும், எந்த வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் தொடர்வதற்கு தெற்கின் சமூகம் இடமளிக்கூடாது என்றும் அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

சதீஷ்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தாருடைய தனிப்பட்ட மகிழ்வில் நாமும் பங்கு கொடுக்கின்றோம்.

ஆனால் பொது மன்னிப்பு என குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டு அரசியல் கைதிகளை விடுதலை என வெளியில் அனுப்புவதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு என்றுமே ஏற்றுக் கொள்வதில்லை.

அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு என்பது அரசாங்கம் பயங்கரவாதத்தினை அங்கீகரிப்பதாகவும் அதற்கு எதிரான மக்களின் விடுதலை செயற்பாட்டினை தொடர்ந்து பயங்கரவாதமாக்குவதுமான செயலுமாகும்.

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல: அருட்தந்தை சத்திவேல் | Cannot Accept Release

தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் கைதியான சதீஷ்குமாரின் விடயத்திலும் அதுவே மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசத் துரோகிகள் அல்ல

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல. பயங்கரவாதிகளும் அல்ல.

அவர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி காலத்திற்கு காலம் ஜனாதிபதிகள் விடுதலை என வெளியில் அனுப்புவது என்பது தமிழ் மக்களையும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அவமதிக்கும் செயலாகும்.

தற்போதைய ஜனாதிபதி 25ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இன பிரச்சனைக்கான தீர்வு என்று நாடாளுமன்றத்தில் கொக்கரித்தார்.

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல: அருட்தந்தை சத்திவேல் | Cannot Accept Release

தமிழ் மக்கள் விரும்பாத 13 ம் யாப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த போவதாக அரசியல் நாடகம் ஆடினார்.

அது பயங்கரவாதமாகும் அரசியல் யாப்பில் உள்ள 13ஆம் யாப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று கூறி பெருமளவான இயக்குகள் வீதி போராட்டத்தை நிகழ்த்தினார் .

பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களுக்கு எதிராக பாயவில்லை இவர்களா தேசப்பற்றாளர்கள்?

விடுதலை செயற்பாட்டை பயங்கரவாதமாக்கி அதற்கு துணையாக பயங்கரவாத தடை சட்டத்தை கொண்டு வந்து 44 ஆண்டு காலமாக பாதுகாப்பதும் 75வது சுதந்திர ஆண்டிலும் அதன் பாதுகாப்பிலே ஆட்சி செய்ய நினைப்பதும் அச்சட்டத்தினை புது பெயரில் தொடர வழி சமைப்பதும் பயங்கரவாதமாகும்.

தமிழர்களின் அரசியல் தீர்வு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் வாடும் தமிழக அரசியல் கைதிகளையும் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது தமிழர்களின் அரசியல் தீர்வு காண ஆரம்ப செயற்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

அரசியல் கைதிகள் என்போர் தேசத் துரோகிகள் அல்ல: அருட்தந்தை சத்திவேல் | Cannot Accept Release

அன்று குட்டிமணி கூறியது போன்று தற்போது அரசு பயங்கரவாதம் வேறு வடிவத்தில் தெற்கு பக்கம் திரும்பி உள்ளது.

இதற்கு எதிரான தெற்கின் சக்திகள் தமிழ் மக்களுடைய அரசியலை அங்கீகரித்து அதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான செயற்பாட்டை இன்னும் தீவிரபடுத்த முடியும்.

இல்லையேல் நாடு தொடர்ந்து பிளவுபட்டே இருக்கும் என்பதையும் தெற்கின் சக்திகள் உணர வேண்டும்.

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US