கொழும்பின் புறநகரிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் வீட்டில் வளர்க்கப்பட்ட சுமார் 3.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கலப்பின குஷ் செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெதிமால, ரூபசிங்க வீதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட 33 வயதான நபர் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகராட்சி மன்ற தீயணைப்பு பிரிவில் பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குஷ் செடி
2 - 3 அடி போன்ற பல்வேறு அளவுகளில் 36 கஞ்சா கலப்பின குஷ் செடிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரித்தபோது, இந்த செடிகள் இணையம் வழியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கஞ்சா கலப்பின குஷ் விதைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
சந்தேக நபர் தயாரித்த போதைப்பொருட்களை நண்பர்கள் மத்தியில் விற்பனை செய்து வந்துள்ளார். அத்துடன் இரவு விடுதி வாடிக்கையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தாவரங்களை உலர்த்திய பிறகு, ஒரு கிராம் 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
