முள்ளியவளையில் வேட்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை
தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சை குழு 12இல் களமிறங்கியிருக்கும் வேட்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம், நேற்றையதினம் (03.11.2024) மாலை 6.30 மணியளவில் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருடைய உறவினர் மற்றும் ஆதரவாளரால் “வீடு தேடிவந்து தாக்குவோம்” என அச்சுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருடைய வாகனம் இன்றையதினம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டதாகவும் அதனை குறித்த கருத்துக்களை மக்களிடம் கூறுவதாக கூறியே குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும். இந்த குறித்த விடயம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
