வவுணதீவில் புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு
இலங்கை புற்றுநோய் சங்கம் - மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (27) வவுணதீவு பிரதேசத்தின் புதுமண்டபத்தடி சுகாதார பரிசோதனை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
புற்றுநோய் குறித்து விளக்கமளிப்பு
புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் வைத்தியர் இ. சிறிநாத் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்பூட்டல் நிகழ்வில் மகப்பேற்று வைத்திய நிபுணர் கே.ஈ.கருணாகரன் கலந்து கொண்டு பெண் நோயியல், புற்றுநோய் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
மேலும், லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உப தலைவர் வீ. பார்த்தீபன், லயன்ஸ் கழக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் உடல் பரிசோதனையிலும் சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |