கதிரியக்க சிகிச்சை தாமதம் காரணமாக உயிராபத்தை எதிர்கொள்ளும் புற்றுநோயாளிகள்
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கதிரியக்க சிகிச்சை தாமதம் காரணமாக உயிராபத்தை எதிர்கொண்டுள்ளனா் அபேக்ஷா மருத்துவமனையில் தற்போதைக்கு மூன்று கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள் உள்ளன.
எனினும் அவற்றைக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கான வசதி உரிய முறையில் செய்து தரப்படவில்லை, தமக்கான உரிய பணி ஒதுக்கீடு நடைபெறவில்லை போன்ற காரணங்களை முன்வைத்து கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் கடந்த நாட்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனைப் பணிப்பாளருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதை அடுத்து அவர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
உயிராபத்தை எதிர்கொள்ளும் நிலை
எனினும், நாளாந்தம் சுமார் நூற்றி ஐம்பது நோயாளிகள் கதிரியக்க சிகிச்சை பெறுவதற்காக மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அறுபது வரையான நோயாளிகளுக்கு மாத்திரமே கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் காரணமாக சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடிய நோயாளிகள் அதற்குப் பதிலாக பெரும் உயிராபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் இந்த அசமந்த போக்கு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அடுத்த வாரம் ஆணைக்குழுவுக்கு சமூகமளிக்குமாறு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஆணைக்குழு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்... ஒரு காரின் விலை மட்டும் இத்தனை கோடியா? ஷாக்கில் ரசிகர்கள் Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022