முன்வைக்கப்படும் புகலிட கோரிக்கைகள்: கனடா எடுத்துள்ள முடிவு
கனடாவில் (Canada) புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சட்டம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கமானது, "புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை துரித கதியில் நாடு கடத்தக்கூடிய முறை குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
அண்மைக்காலமாக வெளிநாட்டு மாணவர்களின் புகலிடக் கோரிக்கை 1500 வீதமாக அதிகரித்துள்ளது.
பாதீட்டுத் திட்டம்
அங்கீகரிக்கப்பட்ட காலத்தின் பின்னர் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருப்பதற்காக இவ்வாறு மாணவர்கள் புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புகலிட கோரிக்கைகளை பரிசீலனை செய்தலை துரிதப்படுத்தவும், நிராகரிக்கப்பட்டவர்களை வேகமாக நாடு கடத்தவும் கூடிய ஏற்பாடுகள் செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கனேடிய பாதீட்டுத் திட்டத்திலும் இதற்கான ஒதுக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குடிவரவு மற்றும் புகலிட பாதுகாப்பு சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 46736 பேர் கனடாவில் புகலிட அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 62 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 18 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam