கனடா - டொரன்டோவில் களவாடப்பட்ட 500 வாகனங்கள் மீட்பு - உலக செய்திகளின் தொகுப்பு
கனடாவில் களவாடப்பட்ட 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் டொரன்டோ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சில மாதங்களாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக இட்டோபீகோக் பகுதியை அண்டிய இடங்களில் இந்த வாகனக கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் அடிப்படையில் இதுவரையில் களவாடப்பட்டிருந்த 556 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் சந்தை பெறுமதி 27 மில்லியன் டாலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,