மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது! வெளியான அறிவிப்பு
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு யாராவது பரிந்துரைத்தால், நாங்கள் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம்.
இருப்பினும், நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமையாது என்பதுடன், நாட்டை சீர்படுத்துவதற்கு எந்த வகையான தீர்வையும் வழங்காது. மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 4,000 ஆகக் குறைத்து, விருப்புரிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படாமல் திட்டமிட்டு நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை மக்கள் உணர்ந்து செயற்படுவார்கள்.
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

தனது மகள் மற்றும் மனைவியுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா- வெளிவந்த புகைப்படங்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
