மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது! வெளியான அறிவிப்பு
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு யாராவது பரிந்துரைத்தால், நாங்கள் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம்.

இருப்பினும், நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமையாது என்பதுடன், நாட்டை சீர்படுத்துவதற்கு எந்த வகையான தீர்வையும் வழங்காது. மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 4,000 ஆகக் குறைத்து, விருப்புரிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படாமல் திட்டமிட்டு நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை மக்கள் உணர்ந்து செயற்படுவார்கள்.
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam