மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது! வெளியான அறிவிப்பு
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு யாராவது பரிந்துரைத்தால், நாங்கள் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம்.

இருப்பினும், நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமையாது என்பதுடன், நாட்டை சீர்படுத்துவதற்கு எந்த வகையான தீர்வையும் வழங்காது. மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 4,000 ஆகக் குறைத்து, விருப்புரிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படாமல் திட்டமிட்டு நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை மக்கள் உணர்ந்து செயற்படுவார்கள்.
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam