கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை
கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை எதிர்வரும் 6ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி கிண்ணியாவில் படகு விபத்து சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கிண்ணியாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தில் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆணைக்குழுவின் கண்காணிப்பு பிரிவு, ஊடகவியலாளர்கள் கிண்ணியா சம்பவத்தின் போது தாக்கப்பட்டமை தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளது.
அதன் தொடர் நடவடிக்கையாக குறித்த கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri