யாழ்.தையிட்டி விகாரை காணி சுவீகரிப்பு முயற்சிக்கு எதிராக அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு- செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் பலாலி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தையிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை தர இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் எங்ளுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாக இருந்தால் நிரந்தரமாகவே அந்தக் காணிகள் சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.
ஆகவே சட்டவிரோத விகாரைக் கட்டுமாணத்தையும், நில அளவைப் பணிகளையும் எதிர்த்து எதிர்வரும் செவ்வாய்க் கிழமை(12) தமிழ் மக்கள் அனைவரும் அங்கே திரண்டு தமது எதிர்ப்பை பலமாகக் காட்டி அளவீட்டு பணிகளை தடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் எழுந்திருக்கிறது.
எமது மண்ணை பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென அன்புரிமையோடு கேட்டு நிற்கிறோம்“ என கூறியுள்ளார்.
இந்த செய்தியுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
