என்னை ஐயா என்று அழையுங்கள்! தொண்டர்களை மிரட்டும் ஜீவன் தொண்டமான்
தன்னை “ஐயா” என்றே அழைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கட்டளை இட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தன்ன ஐயா என்று அழைக்க வேண்டும் எனவும் தான் வரும் போது, ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க வேண்டும் என அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் வயதில் குறைந்தவர் என்பதனால் அவர் வரும் போது யாரும் ஆசனத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை எனவும் தன்னை ஐயா என்று அழைப்பதில்லை என்பதனாலும் அவர் இந்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் முலும் தகவல் வெளியிட்டுள்ளது.