இலங்கையில் முதலீடு செய்யுங்கள்! இந்திய முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு
இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இந்தியா, இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் சுபீட்சத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்றைய தினம் நடைபெற்ற இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைக்கும் நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறப்பர், ஆடைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆறு துறைகளில் முதலீடு செய்யுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
விசேட பொருளாதார வலயங்களில் கிடைக்கும் நலன்களை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக துறைமுக நகரில் முதலீடு செய்யுமாறு அவர் இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri