தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சு!
அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து பேசி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்து கட்சிகளினதும் பங்களிப்புடன் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசியல் அமைப்பின் பிரகாரம் தேசிய அரசாங்கமொன்றை நிறுவினால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 60 வரையில் விஸ்தரிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அரசாங்கம் தொடர்பிலான முனைப்புக்கள் தொடர்பில் ஆளும் தரப்பிலிருந்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
