அமைச்சரவை மறுசீரமைப்பு மீண்டும் ஒத்திவைப்பு!
உத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கவலையில் உள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது எனக் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகத் தகவல்கள் பரவிய நிலையில், தமக்குப் பதவிகள் கிடைக்கும் என மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
அமைச்சு பதவிகள்
மொட்டுக் கட்சியில் யார், யாருக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற பெயர்ப்பட்டியலும் ஜனாதிபதிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், அமைச்சரவை மாற்றம் தற்போது நடைபெறாது என ஜனாதிபதி செயலகத் தகவல்கள்
தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri
