இலங்கை மீண்டும் முடக்கப்படுமா? அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது
இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை அமைச்சரவை இணை பேச்சாளரும், பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது எதிர்காலத்திலும் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |