விரைவில் அமைச்சரவையில் மாற்றம்? - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, ஆளும் கட்சியிலிருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூவருக்கே இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,