பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கை
ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்பதால் பிராந்திய சபைகளை அமைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்ததாக, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கில் உள்ள பிரச்சினைகள் தெற்கில் உள்ள பிரச்சினைகளை விட வித்தியாசமானவை.

மாகாணங்களுக்கான பிராந்திய சபைகள் அமைப்பு
இதன்போது, ஒவ்வொரு மாகாணத்திலும் பிராந்திய சபைகளை ஸ்தாபிக்குமாறு குணவர்தனவிடம் யோசனை தெரிவித்துள்ளோம்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபையில் அங்கம் வகிக்க எமக்கு சம்மதமில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழெட்டு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியிருப்பதாலும், தெற்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை குறித்த
சபை கையாள்வதாலும், அதில் கலந்து கொள்வதில் பிரயோசனமில்லை என தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 22 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri