பயணத்தடை நீக்கத்தின் பின்னரும் காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் திறக்கத்தடை
பயணத்தடை நீக்கத்தின் பின்னர் காத்தான்குடியில் அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மாத்திரமே இன்று(22) இரண்டாவது நாளாகவும் திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாமசிகள், பல சரக்கு கடைகள், மரக்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டன.
கோவிட் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களைத் தவிர வேறு எந்தவொரு வர்த்தக நிலையங்களையும் திறக்க வேண்டாம் எனவும், அத்தியாவசிய சேவைகளான பாமசிகள், பலசரக்கு(சில்லறை) கடைகள், பழக்கடை, மரக்கறிக்கடை, மீன், இறைச்சிக் கடை, பேக்கரிகள் மாத்திரமே தங்களது வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளைப் பிற்பகல் 6 மணி வரை மாத்திரம் மேற்கொள்ளமுடியும் என்பதோடு,ஹோட்டல்கள் உட்பட ஏனைய எந்தவொரு வர்த்தக நிலையங்களும் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் காத்தான்குடி நகருக்கான கோவிட் தடுப்பு செயலணி காத்தான்குடி மக்களுக்கு அறிவித்துள்ளது.
அந்த வகையில் பயணத்தடை நீக்கத்தின் பின்னரும் காத்தான்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் கண்காணிப்பு நடவடிக்கையிலும்
பாதுகாப்புக் கடமையிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.