தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகள் தொடர்பில் விசாரணை
தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நெடுஞ்சாலையில் நின்று உணவருந்தியமை தொடர்பிலேயே குறித்த பேருந்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெலிப்பண்ண பகுதிக்கு அருகில் குறித்த பேருந்துகளின் சாரதிகள் வீதியில் பேருந்தை நிறுத்தி மதிய உணவு இடைவேளை எடுப்பதைக் காட்டும் காணொளியானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
அப்படி நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலையிலோ அல்லது நெடுஞ்சாலையின் எந்தப் பகுதியிலோ வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 10 மணி நேரம் முன்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri