பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.
இரண்டு சந்தர்ப்பங்களில் 25 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதில்லை என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,பணியாளர்களுக்கான வேதனத்தை வழங்குதல் மற்றும் சகல தனியார் பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளமையால் எங்களது தொழில்துறை பாதிப்படைந்துள்ளது.
கட்டணத்தை குறைக்க முடியாது

தற்போது சாதாரண பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தை குறைக்க முடியாத நிலை காணப்படுகிறது. கோவிட்19 காரணமாக அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை வருடாந்த கட்டண திருத்தத்தின்போது அமைச்சர் குறைத்திருக்க முடியும்.
எனினும் அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன குறித்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கவில்லை.
கடந்த காலங்களில் எரிபொருள் குறைவாக காணப்பட்ட நிலையில் சேவையில் ஈடுபட்ட சில பேருந்துகள் அதிகளவான வருவாயை ஈட்டியிருந்தன.
இதன்போது பேருந்து பணியாளர்களும் அதிக வேதனத்தை பெற்றதுடன் தற்போது அந்த தொகைக்கே பணியாற்றுகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri