பேருந்து பனை மரத்தில் மோதி விபத்து: இருவர் காயம் (Video)
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் மதவாச்சி சியம்பலகஸ்வெவ பிரதேசத்திற்கு அருகில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்தில் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தே நேற்று மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பனைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
விபத்தில் பேருந்து சாரதி உட்பட மற்றுமொருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேகமாக வாகனத்தை செலுத்தியமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam