ஈரானில் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்து
மத்திய ஈரானில் (Iran) பாகிஸ்தான் (Pakistan) யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 07 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை உயிரிழந்த 28 பேரில் 11 பெண்களும் 17 ஆண்களும் அடங்குவர் எனவும், 6 பேர் சிகிச்சைப்பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பில் கோளாறு
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து ஈரான் வழியாக ஈராக்கின் கர்பலா நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், பேருந்தின் தடுப்பு முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam